முன்னாள் ராணுவ வீரர் போக்சோவில் கைது!

X
வேலூரைச் சேர்ந்தவர் முன்னாள் ராணுவ வீரர் புருஷோத்தமன் (71). இவர் அதே பகுதியை சேர்ந்த 10 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதனையறிந்த சிறுமியின் பெற்றோர், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து புருஷோத்தமனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story

