வீட்டில் சுவர் இடிந்து விழுந்து பெண் பலி

வீட்டில் சுவர் இடிந்து விழுந்து பெண் பலி
X
மதுரை அருகே வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் பெண் ஒருவர் பலியான சம்பவம் நடந்துள்ளது.
மதுரை அருகே வளையங்குளம் கிராமத்தில் முத்தாலம்மன் கோவில் தெருவை சேர்ந்த அம்மா பிள்ளை (65) இவரது பேரன் வீரமணி ( 10) மற்றும் அருகில் உள்ள வீட்டில் இருந்த பெண் வெங்கட்டி (55) ஆகியோர் நேற்று (மே.19)இரவு ஏழு மணி அளவில் பேசிக் கொண்டிருந்தனர். மாலை 6 மணி முதல் மின்தடை ஏற்பட்டதால் வீட்டின் வாசலில் அருகே உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தனர். மழை பெய்து கொண்டிருந்தபோது திடீரென வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் வெங்கட்டி மற்றும் அம்மா பிள்ளை அவரது பேரன் வீரமணி ஆகிய மூவரும் படுகாயமடைந்தனர். அப்போது அருகில் இருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் மூவரையும் வலையன் குளம்.அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்றனர். அதனைத் தொடர்ந்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு வெங்கட்டம்மா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் படுகாயம் அடைந்த அம்மா பிள்ளை, வீரமணி ஆகியோருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story