அரசியல் கட்சி கொடி கம்பங்கள் அகற்றம்

மதுரை அவனியாபுரம் பகுதியில் நெடுஞ்சாலை பகுதியில் வைக்கப்பட்டிருந்த அரசியல் கட்சி கொடி கம்பங்கள் அகற்றப்பட்டன.
மதுரை மாநகரில் அவனியாபுரம், கோ.புதூர், அண்ணாநகர், பழங்காநத்தம் உள்ளிட்ட பகுதிகறில் உள்ள நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடங்களில் உள்ள அரசியல் கட்சிகளின் கொடி கம்பங்களை அகற்ற வேண்டும் எனமதுரை நெடுஞ்சாலை உதவிக் கோட்டப் பொறியாளர் அலுவலகம் சார்பில் கட்சி கொடி கம்பங்களில் ஒட்டப்பட்ட நோட்டீஸ் ஒட்டப்பட்டு இருந்தது. அரசியல் கட்சிகள்,  சமுதாய அமைப்புகளின் கொடிகம்பங்களை 12 வாரங்களில், அவர்களாகவே அகற்றி கொள்ள வேண்டும் என உயர்நீதிமன்றம் கிளை உத்தரவிட்டு இருந்தது. சென்னை உயர்நீதிமன்றம் தலைமை நீதிபதி அமர்வும் உறுதி செய்தது. இந்த நிலையில் நோட்டீஸ் ஒட்டி இரண்டு மாதங்கள் ஆகியும் ஒரு சில கட்சிகள் கொடிக்கம்பங்களை அகற்றாததால் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் நேற்று ( மே.19)அவனியாபுரம் பகுதியில் வைக்கப்பட்டுள்ள கட்சி கொடி கம்பங்களை அகற்றி வருகின்றனர்.
Next Story