சாமியாடி விபூதி பூசி தலையில் அடித்ததில் பெண் பலி

X
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்த கௌதம் (34) இவரது மனைவி பிரியா(26). இவர்களுக்கு 40 நாட்களுக்கு முன்பாக அறுவை சிகிச்சை மூலமாக குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் குழந்தையை மட்டும் அவரது கணவர் வீட்டிற்கு எடுத்து சென்றுள்ளார். இதனால் அவர்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இன்று ( மே.20) காலை மதுரை மாவட்டம் கூடக்கோவில் அருகேயுள்ள குலதெய்வ கோவிலில் வைத்து குடும்பத்தினர் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். 40 நாட்களே ஆன பச்சிளங்குழந்தையை தாயார் பிரியாவிடம் ஒப்படைத்துள்ளனர். பின்னர் பிரியாவிற்கு அவரது கணவரின் சகோதரர் கௌசிக் சாமியாடியபடி விபூதி பூசிவிட்டு பிரியாவின் தலையில் ஆசிர்வதிப்பதாக அடித்தபோது சம்பவ இடத்திலயே மயங்கி பிரியா விழுந்துள்ளார்.உடனடியாக பிரியாவை வலையங்குளம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் பிரியா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் உள்ளது.இது குறித்து மதுரை ஆர்.டி.ஓ ஷாலினி தலைமையில் விசாரணை நடைபெறவுள்ளது.இந்த சம்பவம் குறித்து கூடக்கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

