நிழற் கூடம் அமைக்க அளவிடும் பணிகள் தொடக்கம்

X
Komarapalayam King 24x7 |21 May 2025 2:24 PM ISTநிழற் கூடம் அமைக்க அளவிடும் பணிகள் தொடக்கம் ஒன்றிய பொறுப்பாளர் நேரில் ஆய்வு
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள தட்டாங்குட்டை ஊராட்சிக்குட்பட்ட கத்தேரி பைபாஸ் பிரிவில் பேருந்து நிழற் கூடம் வேண்டுமென்று பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கை வைத்திருந்த நிலையில் பள்ளிபாளையம் வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் நாச்சிமுத்து நாமக்கல் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் K.S.மூர்த்தி ன் வழிகாட்டுதலோடு ஈரோடு பாராளுமன்ற உறுப்பினர் K.E.பிரகாஷ் M.P.யிடம் கோரிக்கை மனு அளித்திருந்தார் அதன் அடிப்படையில் இன்று நிழற் கூடம் அமைக்க திட்ட வரையறை தயார் செய்வதற்காக நிழல் கூட அமைய உள்ள இடத்தை அரசு அதிகாரிகள் அளவீடு செய்தனர் நெடுஞ்சாலைத்துறையினர் அளவிடு செய்யும் பணியினை ஒன்றிய பொறுப்பாளர் நாச்சிமுத்து நேரில் சென்று பார்வையிட்டார். உடன் நாமக்கல் மாவட்ட அறங்காவலர் நியமனக்குழு உறுப்பினர் S.N.சௌந்தரம் மற்றும் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் காந்தி P.நாச்சிமுத்து மற்றும் துறை சார்ந்த அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்...
Next Story
