சேலத்தில் மேஜையில் இருந்து தவறி விழுந்த பெயிண்டர் சாவு

சேலத்தில் மேஜையில் இருந்து தவறி விழுந்த பெயிண்டர் சாவு
X
போலீசார் விசாரணை
சேலம் மரவனேரியை சேர்ந்தவர் வெங்கடாசலம் (வயது65). பெயிண்டர். சம்பவத்தன்று இவர், பொன்னம்மாபேட்டை பகுதியில் உள்ள ஒரு புதிய வீட்டில் மேஜையின் மீது நின்று கொண்டு பெயிண்ட் அடித்துக்கொண்டிருந்தார். அப்போது தவறி விழுந்த அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அம்மாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story