இயற்கை அழைப்புக்கு சென்றவரை மிரட்டி மொபைல் போன் பணம் பறித்த மூன்று பேர் கைது.

இயற்கை அழைப்புக்கு சென்றவரை மிரட்டி மொபைல் போன் பணம் பறித்த மூன்று பேர் கைது.
இயற்கை அழைப்புக்கு சென்றவரை மிரட்டி மொபைல் போன் பணம் பறித்த மூன்று பேர் கைது. கரூர் அடுத்த வெண்ணமலை பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக் 28. தனியார் டெக்ஸ் நிறுவன ஊழியர். மே 16ம் தேதி சேலம் - கரூர் தேசிய நெடுஞ்சாலையில் ஆத்தூர் பிரிவு அருகே டூவீலரில் சென்று கொண்டு இருந்தார் . அப்போது ,இயற்கை உபாதைக்காக வண்டியை நிறுத்தி உள்ளார். அங்கு மற்றொரு டூவீலரில் வந்த மூன்று பேர் கார்த்திகை மிரட்டி அவரது மொபைல் போன் & ரூ. 47,500-ஐ பறித்து சென்றனர். சம்பவம் குறித்து கார்த்தி கொடுத்த புகாரில், வேலாயுதம் பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழிப்பறி சம்பவத்தில் பணம் & மொபைல் போனை பறித்த வேலாயுதம்பாளையம் பகுதியைச் சேர்ந்த சரவணன்,புஞ்சை புகலூரை சேர்ந்த ரூபன், இப்ராஹிம் ஆகிய மூன்று இளைஞர்களையும் வேலாயுதம்பாளையம் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Next Story