இடி தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு நிதி உதவி வழங்கிய அமைச்சர்

இடி தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு நிதி உதவி வழங்கிய அமைச்சர்
X
மதுரை அருகே இடிதாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு அமைச்சர் நிவாரண நிதி உதவியை வழங்கினார்.
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த 14.05.2025 அன்று இடி தாக்கி உயிரிழந்த கள்ளிக்குடி வட்டம், கரிசல்காளம்பட்டி கிராமத்தைச் சார்ந்த இருளப்பன்(46) என்பவரது மனைவி சூரக்காளுக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து இயற்கை இடர்பாடு நிவாரண உதவித்தொகை ரூ.4 இலட்சத்திற்கான காசோலையை இன்று (மே.21) வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி அவர்கள் வழங்கி ஆறுதல் கூறினார். உடன் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் மணிமாறன் மற்றும் திமுக முக்கிய நிர்வாகிகள் பலர் இருந்தனர்.
Next Story