வார இறுதிநாட்கள் மற்றும் வைகாசி அமாவாசையை முன்னிட்டு

X
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக சேலம் கோட்டம் மூலம் சேலம், நாமக்கல், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் இருந்து வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களில் பயணிகளின் வசதிக்காக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதன்படி வார இறுதி நாட்கள் மற்றும் 26-ந் தேதி வைகாசி அமாவாசையை முன்னிட்டு அரசு போக்குவரத்துக்கழக சேலம் கோட்டம் சார்பில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் 27-ந் தேதி வரை பல்வேறு வழித்தடங்களில் பயணிகளின் தேவைக்கு ஏற்ப 250 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. அதாவது சேலம், பெங்களூரு, சென்னை, ஓசூர், கோவை, திருப்பூர், திருவண்ணாமலை மற்றும் சிதம்பரம் ஆகிய பஸ் நிலையங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. மேலும் பல்வேறு வழித்தடங்களில் செல்லும் அரசு பஸ்களில் அரசு விரைவு போக்குவரத்து கழக முன்பதிவு மையம் வழியாகவும், இணையதளம் மற்றும் செயலி வழியாகவும் முன்பதிவு செய்யப்பட்டு வருகிறது. வைகாசி அமாவாசையை முன்னிட்டு சேலம் மற்றும் தர்மபுரியில் இருந்து மேட்டூர், மாதேஸ்வரன் மலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. மேலும் சேலத்தில் இருந்து பவானி, கூடுதுறை மற்றும் சித்தர் கோவில் ஆகிய பகுதிகளுக்கும் தேவைக்கேற்ப கூடுதல் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே பயணிகள் அனைவரும் கூட்ட நெரிசலை தவிர்த்து பாதுகாப்பான பயணம் மேற்கொள்ள வேண்டும் என்று அரசு போக்குவரத்துக்கழக சேலம் கோட்ட நிர்வாக இயக்குனர் ஜோசப் டயஸ் தெரிவித்துள்ளார்.
Next Story

