திருவாப்புடையார் கோவிலில் பாலஸ்தாபன விழா

மதுரை செல்லூர் கோவிலில் பாலஸ்தாபன விழா நடைபெற்றது.
மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் சார்ந்த செல்லூர் பகுதியில் உள்ள அருள்மிகு சுகந்த குந்தளாம்பிகை உடனுறை திருவாப்புடையார் திருக்கோயில் கும்பாபிேஷக திருப்பணிகள் முன்னிட்டு நேற்று கணபதி பூஜைகள் நடைபெற்ற நிலையில் இன்று (மே.23) பாலஸ்தாபன விழா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். அதனை தொடர்ந்து திருப்பணிகள் தொடங்கப்பட்டன.
Next Story