பிரபல ரவுடி துப்பாக்கி முனையில் கைது!

தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் பகுதியில் பரபரப்பு பிரபல ரவுடி துப்பாக்கி முனையில் கைது. முக்கிய நபரை கொலை செய்ய திட்டமா? கத்தி அரிவாள் வாள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்.
தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் பகுதியில் பரபரப்பு பிரபல ரவுடி துப்பாக்கி முனையில் கைது. முக்கிய நபரை கொலை செய்ய திட்டமா? கத்தி அரிவாள் வாள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல். தூத்துக்குடி மாவட்டத்தில் குற்ற செயல்களை தடுக்கும் வகையில் சரித்திர பதிவேடு குற்றவாளிகளின் செயல்பாடுகளை கண்காணிக்க மாவட்ட காவல்கண்காணிப்பாளர் அல்பர்ட் ஜான் உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் தனிப்படை போலீசார் மாவட்டம் முழுவதும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் பகுதியில் ஆயுதங்களுடன் மர்ம நபர் சுற்றித் திரிவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது இதனைத் தொடர்ந்து, தனிபடை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜபிரபு, வடபாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையிலான போலீசார் அப்பகுதி தெருக்கள் மற்றும் முக்கிய சாலை பகுதிகளில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்பொழுது புதிய பேருந்து நிலையம் பகுதியில் வாள், அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கி நின்ற தூத்துக்குடி ஆரோக்கிய புரத்தைச் சேர்ந்த செல்வராஜ் மகன் அந்தோணி மைக்கேல் சுகந்தன் (40) என்பவரை போலீசார் துப்பாக்கி முனையில் சுற்றி வளைத்து தப்பி ஓடாத படி எச்சரிக்கை செய்து கைது செய்தனர். பின்னர் அவரிடம் இருந்த ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். தாளமுத்து நகர் காவல் நிலையத்தில் சரித்திர குற்றவாளி பதிவேட்டில் உள்ள இவர் மீது கொலை வழக்குகள் உட்பட 20க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகி உள்ளது. மேலும் வெடிகுண்டு வீசியும், பழிக்குப் பலியாகவும் நடைபெற்ற கொலை வழக்குகளில் தொடர்புடைய இவர், தற்போது யாரை கொலை செய்ய திட்டமிட்டு பதுங்கி இருந்தார்? அந்த முக்கிய நபர் யார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story