ஓசூர்:சாலை அமைத்து தர நாற்று நடும் போராட்டம்.

X
கிருஷ்ணகிரி மாவட்டம் மோரனப்பள்ளி அருகே அலசந்தம், ராயல் சிட்டி, சிலிகான் சிட்டி ஆகிய குடியிருப்புகளைச் சேர்ந்த பொதுமக்கள், தங்கள் பகுதிக்கு செல்லும் சாலை பல ஆண்டுகளாக குண்டும் குழியுமாக இருப்பதாக சீரமைக்க பலமுறை கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் எந்த ஒரு நடவடிக்கை எடுக்காததால் நேற்று அப்பகுதியில் சாலையில் மழைநீர் தேங்கி இருந்த இடத்தில் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த வட்டார வளர்ச்சி அலுவலர் உடனடியாக தீர்வு காணப்படும் என்று போராட்டத்தை கைவிட உறுதி அளித்ததின் பெயரில் நாட்டு நடும் போராட்டத்தை பொதுமக்கள் கைவிட்டனர்.
Next Story

