திருவிழாவில் காயமடைந்தவர் மரணம்

X
மதுரை மாவட்டம், பேரையூர் அருகே உள்ள காளப்பன்பட் டியைச் சேர்ந்த பால்சாமி மகன் நீதி (53) என்ற கூலித் தொழிலாளி தனது கிராமத்தில் உள்ள கொட்ட கருப்பு கோயில் திருவிழாவையொட்டி, கடந்த புதன்கிழமை சுவாமி தரிசனம் செய்ய சென்றார். அப்போது, அங்கு வந்த அதே ஊரைச் சேர்ந்த மொக்கையன், சூர்யா, மற்றும் அஜீத் ஆகியோர் நீதியிடம் தகராறில் ஈடு பட்டு,அவரைக்கீழே தள்ளிவிட்டனர். இதன் பின்னர் வீட்டுக்குச் சென்ற நீதி மயங்கி விழுந்ததால், குடும்பத்தினர் அவரை உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று (மே.23) உயிரிழந்தார். இதுகுறித்து சேடப்பட்டி காவல் நிலைய போலசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

