எஸ்டேட் தொழிலாளி மயங்கி விழுந்து பலி

X
குமரி மாவட்டம் குலசேகரம் பகுதியை சேர்ந்தவர் ஜெரால்டு ராஜ் (56). எஸ்டேட் தொழிலாளி. சம்பவத்தன்று இவர் வழக்கம் போல் எஸ்டேட்டிற்கு வேலைக்கு சென்று இருந்தார். அப்போது திடீரென அங்கு மயங்கி விழுந்தார். உடன் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக குலசேகரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த போது ஜெரால்டு ராஜு இறந்துவிட்டதாக தெரியவந்தது. இதை அடுத்து கடையாலுமூடு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ஜெரால்டு ராஜ் உடலை மீட்டு பிரயோத பரிசோதனைக்காக குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து அவரது மனைவி ஷீபா (43) என்பவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இறந்த ஜெரால்டு ராஜ் உடல் பிரேத பரிசோதனை இன்று நடைபெற்றது.
Next Story

