யானைகள் கணக்கெடுக்கும் பணி தீவிரம்

யானைகள் கணக்கெடுக்கும் பணி தீவிரம்
X
300 வன ஊழியர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்
முதுமலை புலிகள் காப்பகம், உதகமண்டலம் வனக்கோட்டம் கூடலூர் வனக்கோட்டம் ஆகிய வனப்பகுதிகளில் வருடாந்திர யானைகள் கணக்கெடுப்பு பணிகள் தொடக்கம் முதுமலை புலிகள் காப்பகம், உதகமண்டலம் வனக்கோட்டம் மற்றும் கூடலூர் வனக்கோட்டம் ஆகிய வனப்பகுதிகளில் வருடாந்திர யானைகள் கணக்கெடுப்பு பணிகள் மே 23 முதல் 25, 2025 வரை நடைபெற உள்ளது. முதுமலை புலிகள் காப்பகம், உதகமண்டலம் வனக்கோட்டம் மற்றும் கூடலூர் வனக்கோட்ட வனப்பகுதியில் உள்ள யானைகளின் எண்ணிக்கை மற்றும் நடமாட்ட முறைகளைக் கண்காணிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. திரு. நா. வெங்கடேஷ் பிரபு, இ.வ.ப., மாவட்ட வன அலுவலர், கூடலூர் வனக்கோட்டம் அவர்களின் அறிவுரையின் படி வனச்சரக அலுவலர்கள், வனவர்கள், வனக்காப்பாளர்கள், வனக்காவலர்கள், வேட்டைத்தடுப்புக் காவலர்கள் மற்றும் பிற கள ஊழியர்கள் அடங்கிய ஒருங்கிணைந்த குழுவால் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படும். வன நிலப்பரப்பில் யானைக் கூட்டங்களைக் காணவும் கண்காணிக்கவும் நேரடி மற்றும் மறைமுக முறைகளைப் பயன்படுத்தி இந்தப் பணியாளர்கள் நெருங்கிய ஒத்துழைப்புடன் பணியாற்றுவார்கள். சுற்றுச்சூழல் ரீதியாக உணர்திறன் வாய்ந்த நீலகிரி உயிர்க்கோளத்தில் அமைந்துள்ள கூடலூர் வனக்கோட்டத்தில் யானைகள் பாதுகாப்பில் முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்தப் பிரிவு பல முக்கிய வனவிலங்குகளின் வழித்தடங்களை இணைக்கிறது மற்றும் ஆசிய யானைகளின் குறிப்பிடத்தக்க எண்ணிக்கை உட்பட அதன் வளமான பல்லுயிர் பெருக்கத்திற்கு பெயர் பெற்றது. மூன்று நாள் நடைப்பெறும் யானைகள் கணக்கெடுப்பில் தீவிர தரைவழி ரோந்து, அதிநவீன ட்ரோன் கேமரா மூலம் (Drone Camera) கண்காணிப்பு கணக்கெடுப்பு, கண்காணிப்பு கோபுரங்களின் மூலம் கணக்கெடுப்பு, நீர்நிலைகள், மற்றும் அறியப்பட்ட யானை பாதைகளிலிருந்து தரவு சேகரிப்பு ஆகியவை அடங்கும். இந்த கணக்கெடுப்பின் மூலம் எதிர்கால பாதுகாப்பு உத்திகளை வடிவமைப்பதில், மனித-வனவிலங்கு மோதலை நிர்வகிப்பது மற்றும் வன சுற்றுச்சூழல் பாதுகாப்பின் முக்கியதுவமாக இக்கணக்கெடுப்பு பணிகள் நடைப்பெறுகிறது. மே 23 முதல் 25, 2025 வரை நடைபெற உள்ளது. முதுமலை புலிகள் காப்பகம், உதகமண்டலம் வனக்கோட்டம் மற்றும் கூடலூர் வனக்கோட்ட வனப்பகுதியில் உள்ள யானைகளின் எண்ணிக்கை மற்றும் நடமாட்ட முறைகளைக் கண்காணிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. திரு. நா. வெங்கடேஷ் பிரபு, இ.வ.ப., மாவட்ட வன அலுவலர், கூடலூர் வனக்கோட்டம் அவர்களின் அறிவுரையின் படி வனச்சரக அலுவலர்கள், வனவர்கள், வனக்காப்பாளர்கள், வனக்காவலர்கள், வேட்டைத்தடுப்புக் காவலர்கள் மற்றும் பிற கள ஊழியர்கள் அடங்கிய ஒருங்கிணைந்த குழுவால் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படும். வன நிலப்பரப்பில் யானைக் கூட்டங்களைக் காணவும் கண்காணிக்கவும் நேரடி மற்றும் மறைமுக முறைகளைப் பயன்படுத்தி இந்தப் பணியாளர்கள் நெருங்கிய ஒத்துழைப்புடன் பணியாற்றுவார்கள். சுற்றுச்சூழல் ரீதியாக உணர்திறன் வாய்ந்த நீலகிரி உயிர்க்கோளத்தில் அமைந்துள்ள கூடலூர் வனக்கோட்டத்தில் யானைகள் பாதுகாப்பில் முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்தப் பிரிவு பல முக்கிய வனவிலங்குகளின் வழித்தடங்களை இணைக்கிறது மற்றும் ஆசிய யானைகளின் குறிப்பிடத்தக்க எண்ணிக்கை உட்பட அதன் வளமான பல்லுயிர் பெருக்கத்திற்கு பெயர் பெற்றது. மூன்று நாள் நடைப்பெறும் யானைகள் கணக்கெடுப்பில் தீவிர தரைவழி ரோந்து, அதிநவீன ட்ரோன் கேமரா மூலம் (Drone Camera) கண்காணிப்பு கணக்கெடுப்பு, கண்காணிப்பு கோபுரங்களின் மூலம் கணக்கெடுப்பு, நீர்நிலைகள், மற்றும் அறியப்பட்ட யானை பாதைகளிலிருந்து தரவு சேகரிப்பு ஆகியவை அடங்கும். இந்த கணக்கெடுப்பின் மூலம் எதிர்கால பாதுகாப்பு உத்திகளை வடிவமைப்பதில், மனித-வனவிலங்கு மோதலை நிர்வகிப்பது மற்றும் வன சுற்றுச்சூழல் பாதுகாப்பின் முக்கியதுவமாக இக்கணக்கெடுப்பு பணிகள் நடைப்பெறுகிறது. நீலகிரி மாவட்ட வனப்பகுதியில் துவங்கிய யானைகள் கணக்கெடுப்பு பணியில், 300 வன ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். தமிழகம், கர்நாடக மாநில வனத்துறை சார்பில் ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பு பணி நேற்று துவங்கியது. அதன்படி, நீலகிரி மாவட்டத்தில் முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் கூடலுார், நீலகிரி, முதுமலை, மசினகுடி வனக்கோட்டங்களில் யானைகள் கணக்கெடுப்பு பணி துவங்கியது. இதற்காக, முதுமலை, 24 பகுதியாகவும்; கூடலுார், 30 பகுதியாகவும்; மசினகுடி, 33 பகுதியாகவும்; நீலகிரி, 14 பகுதியாகவும் பிரித்து, பகுதிக்கு, 3 முதல் 4 வன ஊழியர்கள் கணக்கெடுப்பு பணிகள் ஈடுபட்டு வருகின்றனர். கணக்கெடுப்பு பணியின் போது, ஆண் யானை, பெண் யானை, குட்டிகள் மற்றும் மக்னா யானை (தந்தமில்லாத ஆண் யானை) குறித்த விபரங்களை, தேதி மற்றும் நேரத்துடன் பதிவு செய்து வருகின்றனர். வனத்துறையினர் கூறுகையில், 'இப்பணியில், 300 வன ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். கணக்கெடுப்பு பணியில் போது பதிவு செய்யப்படும் விவரங்களின் அடிப்படையில், யானைகளின் எண்ணிக்கை குறித்து விபரம் கணக்கிட்டு அறிவிக்கப்படும்,' என்றனர்.
Next Story