ஓசூர்: தென்பெண்ணை ஆற்றில் மூழ்கி தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு.

X
பெங்களூரு வடக்கு நேருபுரம் பகுதியை சேர்ந்தவர் முகமது அதிபுதீன் (22) தனியார் நிறுவன ஊழியராக உள்ளார். சம்பவம் அன்று இவர் தனது நண்பர்களுடன் ஓசூர் அருகே நாயனகொண்ட அக்ரஹாரம் பகுதியில் உள்ள தென்பெண்ணை ஆற்றுக்கு குளிக்க சென்றார். அனைவரும் ஆற்றில் குளித்தபோது முகமது அதிபுதீன் எதிர்பாரவிதமாக தண்ணீரில் மூழ்கினார். நண்பர்கள் காப்பாற்ற முயன்றனர். அதற்குள் அவர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த ஓசூர் அட்கோ போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் முகமது அதிபுதீன் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்ட வருகின்றனர்.
Next Story

