காவேரிப்பாக்கம் அருகே சாலையோரம் குப்பைகள் எரிப்பதால் மக்கள் அவதி

X
காவேரிப்பாக்கம் ஒன்றியத்திற்கு உட்பட்ட சிறுகரும்பூர் ஊராட்சியில் 1,500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள சிறுகரும்பூர்-வேகாமங்கலம் சாலையில் அரசினர் மேல்நிலைப்பள்ளி எதிரில் சாலை ஓரம் குப்பைகள் கொட்டப்பட்டுள்ளது. அந்த குப்பைகளை அந்த பகுதியிலே எரிப்பதால் புகை மூட்டம் ஏற்பட்டு துர்நாற்றம் வீசுகிறது. மேலும் சாலையில் புகைமூட்டம் ஏற்படுவதால் அங்கு வசிக்கும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.மேலும் இரு சக்கர வாகனங்களில் செல்லக்கூடியவர்கள் எதிரில்வரும் வாகனங்கள் தெரியாமல் சிரமத்திற்குள்ளாகின்றனர். இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், சாலையோரம் கொட் டப்பட்ட குப்பைகளை எரிப்பதால் பொதுமக்களுக்கு தோற்று நோய் ஏற்படும் நிலை உள்ளது. எனவே சாலையோரங்களில் குப்பை கொட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும். பொதுமக்க ளுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க போதிய குப்பைத்தொட்டி கள் அமைத்து குப்பைகளை கொட்டுவதற்கு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
Next Story

