கூடலூர் அருகே மழையில் ஒழுகும் அங்கன்வாடி கட்டிடம்

கூடலூர் அருகே மழையில் ஒழுகும் அங்கன்வாடி கட்டிடம்
X
அங்கன்வாடி
லோயர்கேம்ப், பளியன்குடியில் 53 குடும்பங்களைச் சேர்ந்த பழங்குடியின மக்கள் வசிக்கின்றனர். இங்கு மே14ம் தேதியன்று மாவட்ட ஆட்சியர் ரஞ்சீத்சிங் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் நடந்தது. அப்போது அங்குள்ள சேதமடைந்துள்ள அங்கன்வாடி மைய கட்டடத்தை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் அதனை உடனடியாக சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டுமென உத்தரவிட்டார். ஒரு வாரத்திற்கு மேலாகியும் இதற்கான பணிகள் இதுவரை துவங்கவில்லை.
Next Story