மத்திய அரசின் ஜீவன் ரக்ஷô தொடர் விருது பெற விண்ணப்பிக்கலாம்

மத்திய அரசின் ஜீவன் ரக்ஷô தொடர் விருது பெற விண்ணப்பிக்கலாம்
X
மத்திய அரசின் ஜீவன் ரக்ஷô தொடர் விருது பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் ரத்தினசாமி தகவல் தெரிவித்துள்ளார்.
அரியலூர், மே 25- : அரியலூர் மாவட்டத்தைச் சார்ந்தவர்கள் மத்திய அரசின் ஜீவன் ரக்ஷô தொடர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் பொ.ரத்தினசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்தது: மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில், தைரியமான மற்றும் மனிதாபிமான செயல்கள் செய்து, உயிர் காக்கும் முயற்சியில் ஈடுபட்டவர்களுக்கு சர்வோத்தம் ஜீவன் ரக் ஷா பதக், உத்தம் ஜீவன் ரக் ஷா பதக் மற்றும் ஜீவன் ரக் ஷா பதக் ஆகிய மூன்று விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. நீரில் மூழ்கிய, விபத்துக்கள், தீ விபத்து, மின் கசிவு, நிலச்சரிவு, விலங்குகள் தாக்குதல், சுரங்கங்களில் மீட்பு நடவடிக்கை போன்றவற்றில் உயிரை காப்பாற்றியவர்களுக்கு, 2025 ஆம் ஆண்டுக்கான ஜீவன் ரக்ஷô தொடர் விருது வழங்கப்படுகிறது.தகுதியான நபர்கள், அரியலூர் ஆட்சியர் அலுவலக வளாக தரைதளத்தில், அறை எண், 20} ல் செயல்படும் மாவட்ட சமூக நல அலுவலகத்தை அணுகி விண்ணப்பங்கள் பெறலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை வரும் ஜூலை 31 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
Next Story