பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஒரு அரை தரைமட்டம்

X
சிவகாசி அருகே அம்மாபட்டியில் தங்கப்பாண்டி என்பவருக்கு சொந்தமான கணேஷ்வரி பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. நாக்பூர் உரிமம் பெற்ற இந்த பட்டாசு ஆலையில் இன்று காலை பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. வெடி விபத்தின் காரணமாக சுமார் 10 கிலோமீட்டர் சுற்றளவிற்கு வெடியின் அதிர்வு ஏற்பட்டதால் சுற்றுவட்டார கிராம மக்கள் பதட்டம் அடைந்தனர். விடிவி தின த்தில் ஒரு அறை முற்றிலும் தரைமட்டமானது. தீயணைப்பு துறையினர் தீயணைப்பு பணியில் ஈடுபட்டு அடுத்தடுத்த அறைகளுக்கு தீ பரவாமல் கட்டுப்படுத்தினர். விபத்து குறித்து நடத்திய விசாரணையில் நேற்று பட்டாசு தயாரித்து மீதமிருந்த ரசாயன கலவையை வைத்துவிட்டு சென்ற நிலையில் கலவை செய்யப்பட்ட ரசாயன கலவை நீர்த்து தானாகவே வெடித்தது தெரியவந்துள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் தொழிலாளர்கள் யாரும் பணிக்கு வராத நிலையில் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
Next Story

