மறைந்த வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி ஜெ.குருவின் ஏழாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு பாமக சார்பில் ஜெ.குருவின் திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

மறைந்த வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி ஜெ.குருவின் ஏழாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு  பாமக சார்பில் ஜெ.குருவின் திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
X
மறைந்த வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி ஜெ.குருவின் ஏழாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு பாமக சார்பில் ஜெ.குருவின் திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.*
அரியலூர், மே.25- மறைந்த ஜெயங்கொண்டம் எம்எல்ஏ-வும், மாநில வன்னியர் சங்க தலைவருமான காடுவெட்டி ஜெ.குருவின் ஏழாம் ஆண்டு நினைவு தினம் நேற்று பாமக மற்றும் வன்னியர் சங்கத்தினரால் அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி பாமக மற்றும் வன்னியர் சங்கத்தின் சார்பில் பல்வேறு பகுதிகளில் ஆங்காங்கே ஜெ.குருவின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதனைத் தொடர்ந்து பாமக மாவட்ட செயலாளர் தமிழ்மறவன் தலைமையில் காடுவெட்டியில் குருவின் மணிமண்டபத்தில் உள்ள குருவின் சிலைக்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினர். அதனை தொடர்ந்து மருத்துவர் அன்புமணி ராமதாசை முதல்வராக்குவது லட்சியம் என பாமகவினர் வன்னியர் சங்கத்தினர் உள்ளிட்ட அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.இதில் மாநில செயற்குழு உறுப்பினர் எம் கே ராஜேந்திரன், மாவட்ட அமைப்பு செயலாளர் படைநிலை செந்தில் பாமக முன்னால் நகர செயலாளர் மாதவன்தேவா, நிர்வாகிகள் பாப்பாக்குடி பாஸ்கர், கந்தசாமி உள்ளிட்ட பாமகவினர் மற்றும் வன்னியர் சங்கத்தினர் என 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அதனை தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் ஏழை எளிய மக்களுக்கு பாமக மற்றும் வன்னியர் சங்கத்தின் சார்பில் அன்னதானமும் வழங்கப்பட்டது.இதேபோல் ஆண்டிமடம் பஸ் நிலையம் முன்பு வைக்கப்பட்டிருந்த காடுவெட்டி குருவின் திருவுருவப்படத்திற்கு மாநில வன்னியர் சங்க செயலாளர் வைத்தி தலைமையிலான வன்னியர் சங்கத்தினர் மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினர்.இதில் வன்னியர் சங்கத்தினர் பாமக.வினர் என 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
Next Story