ரேஷன் அரிசி கடத்தியவர் மீது குண்டாஸ்

X
திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் அருகே லக்கையன்கோட்டை பகுதியில் சரக்கு வேனில் ரேஷன் அரிசி கடத்தியது தொடர்பாக லக்கையன்கோட்டையை சேர்ந்த ஆனந்த் (எ) ஆனந்தராஜ்(41) உள்ளிட்ட 2 பேரை திண்டுக்கல் குடிமை பொருள் வழங்கள் குற்றப் புலனாய்வுத்துறை இன்ஸ்பெக்டர் சுகுணா தலைமையிலான போலீசார் கைது செய்து 1500 கிலோ ரேஷன் அரிசி, சரக்கு வேன் ஆகியவற்றை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் ஆனந்த்(எ)ஆனந்தராஜின் குற்ற நடவடிக்கையை ஒடுக்கும் பொருட்டு குடிமை பொருள் வழங்கள் குற்றப் புலனாய்வுத்துறை எஸ்.பி.செல்வகுமார் பரிந்துரையின் பேரில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் சரவணன் அவர்கள், ஆனந்த்(எ) ஆனந்தராஜை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிட்டதை தொடர்ந்து குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை டிஎஸ்பி. செந்தில் இளந்திரையன் மேற்பார்வையில் ஆய்வாளர் சுகுணா, சார்பு ஆய்வாளர் ராதா மற்றும் போலீசார் குண்டர் சட்டத்தின் கீழ் ஆனந்த்(எ) ஆனந்தராஜை கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
Next Story

