மஞ்சமலை அய்யனார் கோவில் குதிரை எடுப்பு திருவிழா

மதுரை மாவட்டம் பாலமேடு அருகே மஞ்ச மலை அய்யனார் கோவில் குதிரை எடுப்பு திருவிழா நடைபெற்றது
மதுரை மாவட்டம் வலையபட்டி ஜமீன்தார்கள் கிராம மஞ்சமலை அய்யனார் சுவாமி குதிரை எடுப்பு திருவிழா நேற்று (மே..26) நடைபெற்றது . இத்திருவிழாவில் நேர்த்திக்கடனாக குதிரை, காளை, பசுக்கள் திருமண தம்பதிகள், குழந்தைகள் கோழி உள்ளிட்ட பல்வேறு வண்ணத்தில் உருவ சிலைகள் எடுத்து வந்தனர். முன்னதாக இந்த சிலைகள் அரசம்பட்டி மந்தையில் வேட்டி, துண்டு, வண்ண மாலைகளால் அலங்கரித்து வைத்திருந்தனர் பின் மஞ்சமலை அய்யனார், ஈரடி கருப்புசுவாமி மற்றும் கன்னிமார் உள்ளிட்ட உப தெய்வங்களின் சிலைகளுடன், வாணவேடிக்கை, மேளதாளம் முழங்க ஊர்வலமாக வலையபட்டி மந்தை திடலுக்கு எடுத்து வந்து வைத்தனர்.பின் சிலைகளின் கண்கள் திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.பின்னர் பரிவாரங்களுடன் சுவாமி குதிரைகள் உள்ளிட்ட சிலைகள் அந்தந்த கோயில்களுக்கும், நேர்த்திக்கடன், பொம்மைகள், சுவாமி சிலைகள் 5 கி.மீ., தொலைவில் உள்ள மஞ்சமலை சுவாமி கோயிலுக்கும் எடுத்து செல்லப்பட்டன. இந்நிகழ்வில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.
Next Story