கறம்பக்குடி அருகே மாட்டு வண்டி பறிமுதல்
கறம்பக்குடி முந்திரி கொட்டை தொழிற்சாலை அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கறம்பக்குடி பிலாவிடுதி மேற்கு தெரு பகுதியை சேர்ந்த நடராஜன் (45) என்பவர் சட்ட விரோதமாக மாட்டு வண்டியில் கால் யூனிட் ஆற்று மணல் ஏற்றிச்சென்று உள்ளார்.இதையறிந்த போலீசார் மாட்டு வண்டியை பறிமுதல் செய்து வழக்கு நடராஜன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story




