சௌடாம்பிகை கோயில் வைகாசி உற்சவ திருவிழா

மதுரை உசிலம்பட்டி அருகே சௌடாம்பிகை கோயில் வைகாசி உற்சவ திருவிழா சிறப்பாக நடைபெற்றது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே இ.கோட்டைப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த இராமலிங்க சௌடாம்பிகை அம்மன் திருக்கோவிலில் வைகாசி உற்சவ திருவிழா நேற்று 26 ஆம் தேதி துவங்கி வரும் 30 ஆம் தேதி வரை 5 நாட்கள் நடைபெறவுள்ளது. இத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான கரகம் எடுத்து வரும் நிகழ்வு இன்று (மே.27) நடைபெற்றது. உத்தப்புரம் கிராமத்தில் உள்ள முருகன் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்து, கரகம் உருவேற்றி கோவில் பூசாரி தலையில் சுமந்து வர ஏராளமான பக்தர்கள் கத்தியால் தங்கள் உடலை வெட்டியவாறு அம்மன் கரகத்தை அழைத்து வந்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. உத்தப்புரம் கிராமத்திலிருந்து 2 கிலோ மீட்டர் தொலைவிற்கு ஓம் சக்தி, பராசக்தி என்ற கோஷங்களுடன் அம்மன் கரகத்தை அழைத்து வந்து கோவிலுக்கு கொண்டு வந்தனர். இந்நிகழ்வில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் ஏராளமான மக்கள் வருகை தந்து அம்மனை தரிசனம் செய்தனர்.
Next Story