பரமத்திவேலூர் ஏல சந்தையில் பூக்கள் விலை உயர்வு.

X
Paramathi Velur King 24x7 |27 May 2025 8:13 PM ISTபரமத்திவேலூர் ஏல சந்தையில் பூக்கள் விலை உயர்வடைந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி.
பரமத்திவேலூர்,மே.27: பரமத்திவேலூர் மற்றும் கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் சுற்று வட்டார பகுதிகளில் பல்வேறு வகையான பூக்கள் பயிர் செய்யப்பட் டுள்ளது. இங்கு விளையும் பூக்களை விவசாயிகள் பரமத்தி வேலூரில் உள்ள பூக்கள் ஏல சந்தைகளுக்கு கொண்டு வருகின்றனர். வேலூர், ஜேடர்பாளையம், கபிலர்மலை, பரமத்தி, பாலப்பட்டி மற்றும் கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் பூக்களை ஏலம் எடுக்க வருகின்றனர். கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் குண்டுமல்லி கிலோ ரூ.350-க்கும், சம்பங்கி கிலோ ரூ.60-க்கும், அரளிகிலோ ரூ.120-க்கும், ரோஜா கிலோ ரூ.220-க்கும், பச்சை முல்லைப்பூ கிலோ ரூ.350-க்கும், வெள்ளை முல்லை பூ கிலோ ரூ.300 -க்கும், செவ்வந்திப்பூ கிலோ ரூ.180-க்கும்,கன காம்பரம் கிலோ ரூ.400-க்கும், பன்னீர் ரோஸ் கிலோ ரூ.120-க்கும் ஜாதிமல்லி பூகிலோ ரூ.500-க்கும், காக்கட்டான் பூகிலோ ரூ.500-க்கும் ஏலம் போனது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற ஏலத்தில் குண்டுமல்லி கிலோ ரூ.500-க்கும், சம்பங்கி கிலோ ரூ.100-க்கும், அரளி கிலோ ரூ.160-க்கும், ரோஜாகிலோ ரூ.280-க்கும், பச்சை முல்லைப்பூகிலோ ரூ.450-க்கும், வெள்ளை முல்லை பூ கிலோ ரூ.350-க்கும், செவ்வந் திப்பூ ரூ.220-க்கும், கனகாம்பரம் கிலோ ரூ.600-க்கும், பன்னீர் ரோஸ் கிலோ ரூ.160 -க்கும். ஜாதிமல்லி பூ கிலோ ரூ.700-க்கும், காக்கட்டான் பூ கிலோ ரூ.700-க்கும் ஏலம் போனது. அமாவாசை மற்றும் கிருத்தி கையையொட்டி பூக்கள் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
Next Story
