இருக்கூரில் இடம் ஒதுக்கியாச்சு: வெற்றிலை ஆராய்ச்சி நிலையம் அமைப்பது எப்போது?

இருக்கூரில் இடம் ஒதுக்கியாச்சு: வெற்றிலை ஆராய்ச்சி நிலையம் அமைப்பது எப்போது?
X
இருக்கூரில் 4 ஏக்கர் ஒதுக் கப்பட்ட இடத்தில் வெற் து றிலை ஆராய்ச்சி நிலையம் அமைப்பது எப்போது என விவசாயிகள் எதிர்பார்த்து உள்ளனர்.
பரமத்திவேலூர்,மே.28:    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகாவில் காவிரி கரையோர பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் ஆடிப்பட்டம், தைப்பட்டம் மற்றும் முதியம்பயிர் மற்றும் இளம்ப யிர் என வெற்றிலை பயிர் செய் யப்பட்டு வருகிறது. இத்தொழில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இப்பகுதிகளில் விளையும் வெற்றிலை தரமானதாக உள்ளதால் அதிக அளவில் வெளி மாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக் கப்படுகிறது. இங்கு விளையும் வெற்றிலைகள் கோவை,சேலம், திருச்சி, ஈரோடு, திண்டுக்கல். உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும் கேரளா, ஆந்திரா, கர்நாட கர்நாடகா, மராட்டியம், குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும் தினந்தோறும் லாரிகள் மற்றும் ரெயில்கள் மூலம் அனுப்பப்படுகிறது. பரமத்தி வேலூர் தாலுகாவில் ஏராளமான ஏக்கர் நிலங்களில் வெற்றிலை பயிர் செய்யப் பட்டு வருவதால் இப்பகுதி விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு பரமத்திவேலூர் அருகே உள்ள பொத்தனூரில் வெற்றிலை ஆராய்ச்சி நிலையம் செயல்பட்டு வந்தது. அது தற்போது கோவையில் உள்ள வேளாண்மை கல்லூரிக்கு மாற்றப்பட்டு விட்டது. இதனால் வெற்றிலையில் பரவும் வாடல் நோய், வெள்ளை பூச்சி தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் பரவுகிறது. மேலும் ஒவ்வொரு முறையும் பல்வேறு நோய்கள் பரவுவதால் நோயின் தன்மை குறித்து உடனடியாக கண்டறிய முடியாததால் வெற்றிலை கொடிகள் காய்ந்து பெரும் இழப்பை ஏற்படுத்துவதால் வெற்றிலை விவசாயிகள் மிகுந்த நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். இப்பகுதியில் வெற்றிலை ஆராய்ச்சி நிலையம் அமைவதன் மூலம் வெற்றிலையில் ஏற்படும் நோய்களை அவ்வப் போது கண்டறிந்து அதற்குரிய நிவாரணம் பெறமுடியும். இதனால் வெற்றிலையில் ஏற்படும் நோய்களை தடுக்க முடியும்.
விவசாயிகள் கோரிக்கை
நோய்களை முன்கூட்டியே தடுப்பதன் மூலம் வெற்றிலை விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்படும். ஏற்கனவே கடந்த அரசு பரமத்தி வேலூர் அருகே உள்ள இருக்கூர் பகுதியில் சுமார் 4 ஏக்கர் நிலத்தை வெற்றிலை ஆராய்ச்சி நிலையம் தொடங்குவதற்கு ஒதுக்கியது. ஆனால் தற்போது வரை அங்கு வெற்றிலை ஆராய்ச்சி மையம் தொடங்கப்படவில்லை. எனவே தமிழக அரசு வெற்றிலை ஆராய்ச்சி மையத்திற்கு ஒதுக்கப்பட்ட இருக்கூர் பகுதியில் மீண்டும் வெற்றிலை ஆராய்ச்சி மையத்தை தொடங்க வேண்டும் என வெற்றிலை விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story