கோவை: விளையாட்டு மாரியம்மன் கோவில் திருவிழா !

X
கோவையில் உள்ள மண் கோவில்களில் சித்திரைத் திருவிழா வழக்கம்போல் இந்த ஆண்டும் வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, வேலாண்டிபாளையம், மஞ்சுவரி காலனியில் உள்ள விளையாட்டு மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரைத் திருவிழா, இந்த முறையும் பக்தர்களைப் பரவசத்தில் ஆழ்த்தியது. திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, நேற்று அப்பகுதியில் உள்ள விநாயகர் கோவிலில் இருந்து சிறப்பு ஊர்வலம் புறப்பட்டது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமான பக்தர்கள் விரதம் இருந்து, அக்னி சட்டி, பால்குடம், தீர்த்த குடம் ஏந்தியபடி ஊர்வலமாகச் சென்றனர். மஞ்சுவரி காலனியில் அமைந்துள்ள விளையாட்டு மாரியம்மன் கோவிலை நோக்கிச் சென்ற இந்த ஊர்வலம், பக்தர்களுக்குப் பக்திப் பரவசத்தை ஏற்படுத்தியது. இந்த ஊர்வலத்தில், 14 அடி உயரம் கொண்ட அழகு குத்தி பக்தர்கள் சென்றது அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது. பக்தர்களின் இந்த நேர்த்திக்கடன், காண்போரை பக்தி உணர்விலும், வியப்பிலும் ஆழ்த்தியது குறிப்பிடத்தக்கது.
Next Story

