சேலத்தில் மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது

X
சேலம் அன்னதானப்பட்டி பழனியப்பா காலனியை சேர்ந்தவர் மகேஸ்வரன் (வயது 24). தனியார் நிறுவன ஊழியர். சம்பவத்தன்று இவர் தனது வீட்டின் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தி இருந்தார். மறுநாள் பார்த்த போது மோட்டார் சைக்கிள் திருட்டு போனது. இது குறித்து அவர் அன்னதானப்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது மோட்டார் சைக்கிளை திருடியது மணக்காடு அன்பு நகரை சேர்ந்த ஆல்வின் ராஜ் (19) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.
Next Story

