சேலத்தில் மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது

சேலத்தில் மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது
X
போலீசார் நடவடிக்கை
சேலம் குகை வெங்கட்ராமன் தெருவை சேர்ந்தவர் சம்பத் (வயது 56). இவர், கடந்த 22-ந் தேதி தனது மோட்டார் சைக்கிளை வீட்டின் முன்பு நிறுத்திவிட்டு இரவு தூங்க சென்றார். பின்னர் மறுநாள் காலை பார்த்தபோது, அவரது மோட்டார் சைக்கிளை மர்ம நபர்கள் திருடி சென்றிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து சம்பத், செவ்வாய்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். அதில், ஜான்சன்பேட்டை அன்புநகரை சேர்ந்த அல்வின்ராஜ் (19) என்பவர் சம்பவத்தன்று சம்பத்தின் மோட்டார் சைக்கிளை திருடி சென்றது தெரியவந்தது. இதையடுத்து அல்வின்ராஜை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.
Next Story