திண்டிவனம் அருகே மது பாட்டில்கள் கடத்தியவர் கைது

X
விழுப்புரம் மாவட்டம்,திண்டிவனம் மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் பாலமுரளி தலைமையில் நேற்று மாலை, திண்டிவனம் மேம்பாலத்தின் கீழ் உள்ள பஸ் நிலையத்தில் ரோந்தில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது, புதுச்சேரியிலிருந்து திண்டிவனத்திற்கு வந்த பஸ்சிலிருந்து பையுடன் இறங்கி வந்தவரை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர்.இதில் அந்த நபர், புதுச்சேரியிலிருந்து 21 மதுபாட்டில்களை கடத்தி வந்தது தெரியவந்தது.இது குறித்து சென்னை, மாதவரம், பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த மணிமுத்து, 37; என்பவரை போலீசார் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

