பி.ஏ.பி. வாய்க்காலில் பெண் பிணம்

X
காங்கேயம் பழைய கோட்டை சாலை சத்திரவலசு பகுதியில் பி.ஏ.பி. வாய்க்கால் செல்கிறது. இந்த வாய்க்காலில் நேற்று பெண் ஒருவர் பிணமாக மிதந்தார். இதை கவனித்த பொதுமக்கள் இதுபற்றி உடனடியாக காங்கேயம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் அங்கு சென்று, பிணமாக மிதந்த பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, இறந்த பெண் யார், அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர், எப்படி இறந்தார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story

