மாணவி குளிப்பதை செல்போனில் வீடியோ எடுத்த நபர் கைது.

மாணவி குளிப்பதை செல்போனில் வீடியோ எடுத்த நபர் கைது.
X
பரமத்திவேலூர் அருகே மாணவி குளிப்பதை செல்போனில் வீடியோ எடுத்த லாரி டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
பரமத்திவேலூர்,மே.30: நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே உள்ள ஒரு அரசு பள்ளியில் 14 வயது மாணவி தனது வீட்டின் குளியல் அறையில் குளித்து கொண்டிருந்துள்ளார். மாணவி குளிப்பதை பார்த்த பார்த்த பக்கத்து வீட்டுக்காரரான லாரி டிரைவர் பிரபு என்கிற பிரசாத் குமார்(29) என்பவர் தனது செல்போனில் ரகசியமாக வீடியோ எடுத்துள்ளார். அதை பார்த்த அந்த மாணவி பயந்து தனது பெற்றோரிடம் தகவல் தெரிவித்துள்ளார். அதிர்ச்சி அடைந்த பெற்றோர் லாரி டிரைவர் பிரபு மீது பரமத்தி வேலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். புகாரின் அடிப்படையில் சப் இன்ஸ்பெக்டர் சுமதி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். பின்னர் குளியல் அறையில் குளித்த மாணவியை செல்போனில் ஆபாச வீடியோ எடுத்த லாரி டிரைவர் பிரபுவை கைது செய்து ஆபாச வீடியோ எடுத்த செல்போனை பறிமுதல் செய்தனர். அதனை தொடர்ந்து பரமத்தி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு நீதிபதியின் உத்தரவின் பேரில் பரமத்தில் உள்ள கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார்.
Next Story