காதல் திருமணம் செய்து கொண்ட பெண் தற்கொலை

காதல் திருமணம் செய்து கொண்ட பெண் தற்கொலை
X
கண்டோன்மெண்ட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
திருச்சி கருமண்டபம் பகுதியை சேர்ந்தவர் பிரகதீஷ் குமார் இவரது மனைவி கனிமொழி (வயது 20 )இருவரும் காதலித்து கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு குழந்தை இல்லை. இந்த நிலையில் கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு பிரதீஷ் குமாருக்கு விபத்து ஏற்பட்டு அதில் அவர் இறந்து விட்டார்.இந்த நிலையில் தனிமையில் இருந்த கனிமொழி மன உளைச்சலில் இருந்து வந்தார். இந்த நிலையில் அவருக்கு துணையாக அவரது தாய் காந்திமதி உடனிருந்தார். இந்த நிலையில் கடந்த 22ந்தேதி கனிமொழி தனது வீட்டில் சால்வையில் கூரை கம்பியில் தூக்கு மாட்டி தற்கொலைக்கு முயன்று உள்ளார் இதனை பார்த்த அவரது தாய் அவரை மீட்டு உடனடியாக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வந்தார். பிறகு கனிமொழி மருத்துவமனையில் இருந்து விடு திரும்பினார். பிறகு மீண்டும் சில நாட்களில் சிகிச்சைக்காக பெரம்பலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வந்தார் .அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக கனிமொழி இறந்தார். இந்த சம்பவம் குறித்து கண்டோன்மென்ட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story