திருப்பூருக்கு குடும்பம் நடத்த அழைத்து செல்லாததால்

X
நாகை மாவட்டம் திருக்குவளை அடுத்த நத்தப்பள்ளம் பெறிகாரன் தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் செல்வேந்திரன். இவரது மனைவி பர்வீன் (24). இவர்களுக்கு திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு சஷ்டிகா என்ற ஒரு வயது பெண் குழந்தை உள்ளது. செல்வேந்திரன் திருப்பூரில் வேலை பார்த்து வந்தார். தன்னையும் திருப்பூருக்கு அழைத்துச் செல்லுமாறு பர்வீன் வலியுறுத்தி வந்தார். விரைவில் வீடு பார்த்து அழைத்துச் செல்வதாக செல்வேந்திரன் கூறினார். உடனடியாக அழைத்துச் செல்லும்படி பர்வீன் வற்புறுத்தினார். அதற்கு, அவர் மறுப்பு தெரிவித்ததால் பர்வீன் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. வழக்கம்போல நேற்று முன்தினம் இரவு தூங்கச் சென்ற பர்வின் நேற்று அதிகாலை தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது .தகவலறிந்ததும், அருகில் இருந்தவர்கள், அவரது உடலை மீட்டு, திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து, திருக்குவளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பர்வினுக்கு திருமணமாகி 2 ஆண்டுகளே ஆவதால், ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
Next Story

