வலிவலம் ஶ்ரீ கண்ணாம்பாள் மாரியம்மன், ஶ்ரீ கழனியப்ப ஐயனார் ஆலய வைகாசி திருவிழா  

வலிவலம் ஶ்ரீ கண்ணாம்பாள் மாரியம்மன், ஶ்ரீ கழனியப்ப ஐயனார் ஆலய வைகாசி திருவிழா  
X
மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் விடியவிடிய சுவாமி வீதியுலா
நாகை மாவட்டம் திருக்குவளை தாலுகா கொடியாலத்தூர் ஊராட்சி கோவில்பத்து  வலிவலம் ஶ்ரீ கண்ணாம்பாள் மாரியம்மன், ஶ்ரீ கழனியப்ப ஐயனார் ஆலய 4-ம் ஆண்டு வைகாசி பெருந்திருவிழா   பந்தக்கால் முகூர்த்தத்துடன் கடந்த மே 28-ம் தேதி தொடங்கியது. முக்கிய விழா, தப்பாட்ட கிராமிய கலை நிகழ்ச்சியுடன் அம்மன் வீதியுலா  இரவு தொடங்கி விடிய விடிய நடைபெற்றது. அன்னபட்சி வாகனத்தில் சிறப்பு மலர் அலங்காரத்தில் அம்மன் எழுந்தருளினார். தொடர்ந்து, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் சுவாமி வீதியுலா புறப்பாடு நடைபெற்றது. வீடுகள் தோறும் பொதுமக்கள் அர்ச்சனை செய்து அம்மனை வழிபட்டனர். அழிந்து வரும்  தப்பாட்ட கலையை மீட்டெடுக்கும் வகையில், சுவாமி வீதி உலா புறப்பாட்டின் போது அரங்கேற்றப்பட்ட தப்பாட்ட நடன  நிகழ்ச்சியை  பார்வையாளர்கள் கண்டு மகிழ்ந்தனர். தொடர்ந்து, வலிவலம் அருள்மிகு இருதய கமலநாத சுவாமி திருக்கோயிலிலிருந்து துவங்கி  முக்கிய வீதிகள் வழியாக ஆலயத்தை வந்தடைந்தது. விழாவில், ஏராளமான பக்தர்கள் பால்குடங்கள் சுமந்து வந்தும், அர்ச்சனை செய்தும் அம்மனை தரிசனம் செய்தனர். விழாவில், வலிவலம் கே.எம்.தேசிகர் பண்ணை  பரம்பரை தர்மகர்த்தா அ.மனஅழகன், கோயில் நிர்வாகியும். ஓய்வு பெற்ற கூட்டுறவுத் துறை செயலாளருமான ஆர்.பழனியப்பன், திருவிழா பொறுப்பாளர்கள் எஸ்.வீரசுந்தரம், ஆசிரியர் கோவில்பத்து டி.ஐயப்பன், கோவில்பத்து என்.வேதசுந்தரம், ஆலய அர்ச்சகர் வீ.ராஜசேகர குருக்கள் மற்றும் கோவில்பத்து, கொடியாலத்தூர், வலிவலம் கிராம மக்கள் மற்றும் மருளாளிகள், விழா குழுவினர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Next Story