புளியங்குடியில் புல் அறுக்க சென்றவா் மா்ம மரணம்

X
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே புளியங்குடி மேலமந்தை பகுதியைச் சோ்ந்தவா் சேகு மைதீன் (60). அவரது வீட்டில் மாடுகளை வளா்த்து பால் வியாபாரம் செய்து வந்தாா். இதில் மாடுகளுக்கு புல் அறுக்க வெளியே சென்ற அவா் இரவு வரை வீடு திரும்பவில்லையாம் . பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் அவரது உறவினா்கள் புளியங்குடி காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தனா். புளியங்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து தேடிவந்தனா். அப்போது, புளியங்குடி சங்கரன்கோவில் சாலையில் உள்ள தோட்டத்தில் சேகு மைதீன் இறந்து கிடந்தது தெரிய வந்தது. இதைத் தொடா்ந்து போலீஸாா் அவரின் இறப்பு குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
Next Story

