உலக புகையிலை ஒழிப்பு தினம்
உலக புகையிலை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு பெரம்பலூரில் உள்ள தனியார் திறன்மேம்பாட்டு மையத்தில் பயிலும் மாணவர்களிடம் வழிப்புணர்வு ஏற்படுத்திய பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவினர் புகையிலை மற்றும் போதைப்பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர். பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் மற்றும் பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பசேரா உத்தரவின்படி இன்று (31.05.2025 ) பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் மருதமுத்து, நிறுவன மேலாளர் ஜெகதீசன், ஒருங்கிணைப்பாளர் செல்வம், மாவட்ட உடல்நல அலகு சீனிவாசன் மற்றும் திரு.இளங்கோவன், மாவட்ட புகையிலை தடுப்பு மருத்துவர் Dr.வனிதா, புகையிலை கட்டுப்பாட்டு ஆலோசகர் தென்றல், (ONE STOP CENTER) case worker சௌந்தர்யா, களப்பணியாளர் மணிமாறன் ஆகியோர்கள் இணைந்து பெரம்பலூரில் உள்ள ஜெயராமன் திறன்மேம்பாட்டு மையத்தில் பயிலும் மாணவ மாணவிகளிடம் புகையிலை ஒழிப்பு உறுதிமொழி மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பேசிய சிறப்பு உதவி ஆய்வாளர்கள் புகையிலை ஒழிப்பு தினமான இன்று போதைப்பழக்கத்திற்கு அடிமையாவை தடுப்போம் என விழிப்பு ணர்வு ஏற்படுத்தினார்கள். பின்னர் குழந்தை திருமணம், போக்சோ சட்டம், கல்வியின் முக்கியத்தும், பெண்கல்வியின் அவசியம், பள்ளியில் இடைநின்ற மாணவ மாணவிகளை மீண்டும் பள்ளியில் சேர்ப்பது ஆகியவை குறித்து விரிவான விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். மேலும் கள்ளச்சாராயம், கஞ்சா போன்ற உயிருக்கு தீங்கு விளைவிக்கும் போதைப்பொருட்களை உபயோகிப்பதனால் ஏற்படும் தீமைகள் குறித்தும் அதனை அருந்தி உயிரிழப்பவர்களின் குடும்பங்கள் படும் துயரங்கள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். மேலும் தங்களது பகுதிகளில் சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் கஞ்சா போன்ற போதைப்பொருட்களை விற்பனை செய்யும் நபர்கள் பற்றிய விவரங்கள் தெரிந்தால் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கலாம் என்றும் தகவல் தெரிவிப்பவர்களின் முகவரி உள்ளிட்ட விவரங்கள் இரகசியம் காக்கப்படும் என்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். மேலும் ஒவ்வொரு காவல்நிலையங்களிலும் செயல்படும் இலவச உதவி எண்களான Women Help Desk 112 குழந்தைகளுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை தெரிவிக்க 1098 பள்ளி குழந்தைகளின் பாதுகாப்பிற்காக செயல்படும் இலவச உதவி எண் 14417 முதியோர் உதவி எண்கள் 14567 ஒவ்வொரு காவல் நிலையத்திலும் செயல்படும் உதவி எண்களான சட்டவிரோத மது விற்பனை புகார் எண் 10581 பெண்கள் உதவி மையம் இலவச தொலைபேசி எண் 181 சைபர் கிரைம் உதவி எண்கள் 1930 ஒவ்வொரு பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளுக்கு ஏற்படும் பிரச்சனைகள் குறித்து கேட்டறிந்து அதற்கான தீர்வினை வழங்க வேண்டும் என்றும் அவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். மேலும் *பெற்றோர்கள் ஒவ்வொருவரும் தன் பிள்ளைகளுக்கு தொடுதல் குறித்த விழிப்புணர்வு (GOOD TOUCH BAD TOUCH) பற்றி கட்டாயம் எடுத்துரைக்க வேண்டும் என்றும் கூறினார்கள்.
Next Story




