வாலிபர் தூக்கிட்டு தற்கொலை.

X
மதுரை அருகே அப்பன் திருப்பதி தூயநேரி வசந்த நகரைச் சேர்ந்த ஜெய ராஜ் மகன் ஹென்றி செரின் பிரபு (27) என்பவர் டி.என். பி.எஸ்.சி., மற்றும் யு.பி.எஸ். சி.போட்டி தேர்வுகள் எழுதி வந்துள்ளார். அதில் தேர்ச்சி பெறவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்து நேற்று( மே.31)வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் . இது குறித்து அப்பன் திருப்பதி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

