அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோவிலில் வைகாசி விசாக கொடியேற்று விழா

அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோவிலில் வைகாசி விசாக கொடியேற்று விழா
X
அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோவிலில் வைகாசி விசாக கொடியேற்று விழா
திருச்செங்கோடு வைகாசி விசாகத் தேர்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருச்செங்கோட்டின் சிறப்பான திருவிழாக்களில் ஒன்றான வைகாசி விசாகத் தேர் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. மலைக்கோவிலில் எழுந்தருளி உள்ளஅர்த்தநாரீஸ்வரர் நகருக்கு எழுந்தருளி திருத்தேரில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாளிக்கும் வைகாசி விசாகத்தேர் திருவிழா 14 நாட்கள் விமர்சையாக நடக்கும். முதல் நாள் நிகழ்வாக கொடியேற்ற நிகழ்ச்சி இன்று நடந்தது. செங்கோட்டுவேலவர் சந்நதிக்கு எதிரில் அமைந்துள்ள 36 கணுக்களை உடைய கொடிமரத்தில் பாரம்பரிய முறைப்படி செங்குந்தர் எழுகரை நாடு நெசவாளர்கள் கொடுத்த துணியை கொண்டு கொடி அமைக்கப் பட்டிருந்தது. கொடிசீலையின் ஒரு முனையில் தெய்வத்தின் வாகன வரைபடம் பதித்து இருக்கும் கொடியை மாவிலை கூர்ச்சம் வைத்துகட்டி பூஜைகள் செய்து தர்பை கயிறு, கொடிதுணி, என்ற மூன்றும் ஒன்றாக சேர்த்து கொடிமரத்தில் ஏற்றி சுற்றி கட்டுவார்கள். முன்னதாக முதல் நிகழ்ச்சியாக துவஜாரோகணம் என்னும் சிறப்பு பூஜைகள் அர்த்நாரீஸ்வரருக்கு நடந்தது. தொடர்ந்து உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளிக்க கலச பூசைகள் செய்த சிவாச்சாரியர்கள் கொடியுடன் தர்ப்பை, மாவிலை மற்றும் மலர்கள், கூர்சரம் ஆகியவற்றை வைத்து கட்டி கொடியேற்றினார்கள். தொடர்ந்து அர்த்தநாரீஸ்வர் சந்நிதானம் முன்பு உள்ள கொடி மரத்திலும் கொடியேற்றப்பட்டது. நிகழ்ச்சியில் திருச்செங்கோடு அர்த்நாரீஸ்வரர் கோவில் இணைஆணையர் மற்றும்செயல் அலுவலர் ரமணிகாந்தன், முன்னாள் அறங்காவலர் குழுத்தலைவர் தங்கமுத்து மற்றும் முன்னாள்அறங்காவலர் குழு உறுப்பினர்கள் அருணா சங்கர், உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். விழாவின் தொடர்நிகழ்வாக வரும் 04.06.25 புதன்கிழமை 4 ம் திருவிழா அன்று உற்சவர் சுவாமி திருமலையில் இருந்து பரிவார தெய்வங்களுடன் நகருக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கும். 09.06.25 திங்கள் கிழமை 9 ம் திருவிழா அன்று திருத்தேருக்கு எழுந்தருளும் நிகழ்ச்சியும்,அதே நாளில் விநாயகர் செங்கோட்டு வேலவர் திருத்து வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடைபெறும் இரவு ஆதியசவு பெருமாள் திருக்கல்யாணம் நடைபெறும் . 10.06.25 செவ்வாய்கிழமைஅர்த்தநாரீஸ்வரர் திருத்தேர் வடம் பிடிக்கின்ற நிகழ்ச்சி நடைபெறும். 14.06.25 சனிக்கிழமை 14ம் திருவிழா அன்று அர்த்தநாரீஸ்வர் பரிவார தெய்வங்களுடன் திருமலை சந்நிதானத்திற்கு எழுந்தருளுவார். விழாவை ஒட்டி கண்ணகி விழா, கம்பன் விழா, சேக்கிழார் விழா, வள்ளலார் விழா நடக்க உள்ளது. இதில் பல்வேறு தலைப்புகளில் பட்டி மன்றங்கள், கவியரங்குகள், வழக்காடுமன்றங்கள் நடக்க உள்ளது.
Next Story