விக்கிரவாண்டி அருகே மது பாட்டில் கடத்திய வாலிபர்கள் கைது

விக்கிரவாண்டி அருகே மது பாட்டில் கடத்திய வாலிபர்கள் கைது
X
மது பாட்டில்கள் பறிமுதல் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை
விக்கிரவாண்டி சப்இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் நேற்று மாலை குச்சிபாளையம் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது திருக்கனுாரிலிருந்து 2 பேர் பைக்கில் விழுப்புரம் நோக்கி வந்தனர்.போலீசார் பைக்கை நிறுத்தி சோதனை செய்த போது அதில் 90 மி.லி., அளவுள்ள 100 மதுபாட்டில்கள் கடத்தி செல்வது தெரியவந்தது.விசாரணையில், செஞ்சி அருகே உள்ள பாடியை சேர்ந்த அஜித்குமார், 26; ஆனந்தராஜ், 27; என தெரிந்தது.இருவரையும் கைது செய்த போலீசார், மதுபாட்டில்கள் மற்றும் பைக்கை பறிமுதல் செய்தனர்.
Next Story