நெல் மூட்டைகள் மழையில் நனைந்தது

பெரியபாளையம் அருகே நேரடி கொள்முதல் நிலையம் முறையாக செயல்படாததால் அறுவடை செய்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்து முளைக்க தொடங்கியதால் விவசாயிகள் வேதனை.
பெரியபாளையம் அருகே நேரடி கொள்முதல் நிலையம் முறையாக செயல்படாததால் அறுவடை செய்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்து முளைக்க தொடங்கியதால் விவசாயிகள் வேதனை. திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த ஆவாஜிப்பேட்டை கிராமத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் இயங்கி வருகிறது. அண்மையில் அறுவடை செய்த நெல்மணிகளை ஆவாஜிப்பேட்டையில் உள்ள நேரடி கொள்முதல் நிலையத்திற்கு விவசாயிகள் கொண்டு சென்றுள்ளனர். போதிய இடவசதி, சேமிப்பு கிடங்கு இல்லாததால் விவசாயிகள் கொண்டு வந்த நெல் மூட்டைகள் ட்ராக்டரிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. சில விவசாயிகள் அங்கு கீழே சாலையில் நெல்லை கொட்டி வைத்துள்ளனர். இந்நிலையில் கடந்த மூன்று நாட்களாக பெய்த லேசான மழையின் காரணமாக நெல் மூட்டைகள் மழையில் நனைந்து முளைக்க தொடங்கியதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்ட நெல் மூட்டைகள் சேமிப்பு கிடங்கு இல்லாததாலேயே மழையில் நனைந்து முளைத்துள்ளதாகவும், மேலும் அவற்றை கொண்டு செல்ல லாரி வரவில்லை என அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாக புகார் தெரிவித்தனர். விவசாயிகள் பாதிக்காத வகையில் அரசு உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்
Next Story