கோவை: நீலாம்பூர் பகுதிகளில் நாளை மின்தடை !

X
கோயம்புத்தூரின் நீலாம்பூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால், நாளை (புதன்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது. இந்த மின் நிறுத்தம் நீலாம்பூர், முதலிபாளையம், சேரையாம்பாளையம், வெள்ளானப்பட்டி மற்றும் பவுண்டரி அசோசியேஷன் ஆகிய பகுதிகளில் இருக்கும். மின்வாரியத்தின் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகளுக்காகவே இந்த மின் நிறுத்தம் மேற்கொள்ளப்படுவதாகத் சோமனூர் மின்பகிர்மான வட்டச் செயற்பொறியாளர் சபரிராஜன் வெளியிட்டுள்ள தகவலில் குறிப்பிட்டிருக்கிறார்.
Next Story

