ஜல்லி கற்கள் பெயர்ந்து சேதமடைந்து நிலையில் உள்ள

ஜல்லி கற்கள் பெயர்ந்து சேதமடைந்து நிலையில் உள்ள
X
திட்டச்சேரி - தேவங்குடி ஆற்றங்கரை இணைப்பு சாலையை சீரமைத்து தர கோரிக்கை
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் தேவங்குடி, மத்திக்குடி, நாட்டார்மங்கலம், துறையூர், உத்தூர், எரவாஞ்சேரி, குத்தாலம் உள்ளிட்ட கிராமங்களில், சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நாள்தோறும் திட்டச்சேரி சென்று வர, திட்டச்சேரி - தேவங்குடி இடையே உள்ள 10 ஆண்டுகளுக்கு முன்னர் அமைக்கப்பட்ட ஆற்றங்கரை இணைப்பு சாலையை பயன்படுத்தி வருகின்றனர். மேலும். மேற்கண்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், மருத்துவமனை செல்லும் நோயாளிகள், வேலைக்கு செல்லும் கூலித் தொழிலாளிகள் என நாள்தோறும் நூற்றுக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் இந்த முக்கிய சாலையில், ஜல்லி கற்கள் பெயர்ந்து ஆங்காங்கே குண்டும் குழியுமாக உள்ளது. இதனால், இரவு நேரங்களில் சாலையில் செல்பவர்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, சேதமடைந்த நிலையில் உள்ள திட்டச்சேரி - தேவங்குடி ஆற்றங்கரை இணைப்பு சாலையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story