ராமநாதபுரம் அந்தோணியார் ஆலய கொடியேற்றம் நடைபெற்றது

X
ராமநாதபுரம் மாவட்டம், கமுதியில் உள்ள புனித அந்தோணியார் ஆலயம் 350 ஆண்டுகளுக்கு பழமையான தேவாலயம். இங்கு ஆண்டுதோறும் ஜூன் மாதம் தேர் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி நடப்பாண்டு தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. முன்னதாக அந்தோணியார் உருவம் பொறித்த கொடியை ஏராளமான கிறிஸ்துவர்கள் மேளதாளம் மற்றும் வான வேடிக்கையுடன் எடுத்து வந்து தேவாலயத்தை சுற்றி வந்து,ஆலய வளாகத்தில் உள்ள கொடி மரத்தின் முன்பு சிறப்பு வழிபாடு நடத்தினர். கமுதி பங்குத்தந்தை அம்புரோஸ் லுயிஸ் முன்னிலையில், கொடி அர்ச்சிக்கப்பட்டது. அருப்புக்கோட்டை பங்குத்தந்தை அந்தோணி பாக்கியம் கொடியை ஏற்றினார். பின்னர் திருப்பலி நடைபெற்றது. வரும் 13}ம் தேதி வெள்ளிக்கிழமை புனித அந்தோணியார், புனித சவேரியார், புனித செபஸ்தியார் மற்றும் புனித மைக்கேல் அதிதூதர் தேர்ப்பவனி கமுதியின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வருதல், 14}ம் தேதி அந்தோணியார் தெரு மற்றும் சவேரியார் தெரு பகுதிகளில் தேர்ப்பவனி வலம் வருதல், 15}ம் தேதி கர்த்தநாதசுவாமி நினைவு அசன வைபவம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. இதில் இருதயபுரம் பங்குத்தந்தை கிறிஸ்டோபர் உள்பட ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பரத உறவின் முறையினர் செய்து வருகின்றனர்.
Next Story

