ஆண்டிபட்டி கோட்டை அருகே டூவீலர்மீது டாட்டா ஏஸ் வாகனம் மோதி விபத்து. இளைஞர் படுகாயம்.

ஆண்டிபட்டி கோட்டை அருகே டூவீலர்மீது டாட்டா ஏஸ் வாகனம் மோதி விபத்து. இளைஞர் படுகாயம்.
ஆண்டிபட்டி கோட்டை அருகே டூவீலர்மீது டாட்டா ஏஸ் வாகனம் மோதி விபத்து. இளைஞர் படுகாயம். திண்டுக்கல் மாவட்டம் , நத்தம், செந்துறை , நல்ல பிச்சம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன் மகன் ராஜேஷ் வயது 24 . இவர் மே 28ஆம் தேதி மாலை 5:30- மணி அளவில் , மதுரையில் இருந்து திண்டுக்கல் செல்லும் சாலையில் அவரது டூவீலரில் சென்றார் . இவரது வாகனம் கரூர் மாவட்டம் , ஆண்டிப்பட்டி கோட்டை பகுதியில் செயல்படும் தனியார் பெட்ரோல் பங்க் அருகே வந்தபோது , அதே சாலையில் கரூர், பள்ளப்பட்டி , மண்மாரி பகுதியைச் சேர்ந்த முகமது ஹனிபா வயது 50 என்பவர் வேகமாக ஓட்டி வந்த டாட்டா ஏஸ் வாகனம் , ராஜேஷ் ஓட்டிச் சென்ற டூவீலர் மீது மோதி விபத்து ஏற்பட்டது . இதில் வாகனத்துடன் கீழே விழுந்ததில் ராஜேஷுக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டது. உடனடியாக அவரை மீட்டு திண்டுக்கல்லில் செயல்படும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் அறிந்த ராஜேஷ்-ன் சகோதரர் விக்னேஷ் வயது 22 என்பவர் அளித்த புகாரின் பேரில் ,சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் , டாட்டா ஏஸ் வாகனத்தை வேகமாகவும் , அஜாக்கிரதையாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய முகமது ஹனிபா மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் அரவக்குறிச்சி காவல்துறையினர்.
Next Story