போடி அருகே இருசக்கர வாகன விபத்து ஒருவர் படுகாயம்

X
போடி பகுதியை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி. இவர் நேற்று முன்தினம் தேவாரம் சாலையில் உள்ள பெட்ரோல் பங்கில் அவரது இருசக்கர வாகனத்தில் பெட்ரோல் போட்டு விட்டு சாலையில் திருப்பும் போது அவ்வழியாக அருண் என்பவர் ஓட்டி வந்த பைக் இவரது பைக் மீது மோதியது. இதில் வெள்ளைச்சாமி படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விபத்து குறித்து போடி தாலுகா போலீசார் நேற்று (ஜூன்.2) வழக்குப் பதிந்துள்ளனர்.
Next Story

