சாலை விபத்தில் ஒருவர் பலி

சாலை விபத்தில் ஒருவர் பலி
X
மதுரை பேரையூர் அருகே நடந்த சாலை விபத்தில் டூவீலர் சென்றவர் பரிதாபமாக உயிரிழந்தார்
மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா காரைக்கேணியைச் சேர்ந்த சிவகுமார்( 44) என்பவர் புரோட்டா மாஸ்டராக உள்ளார். இவர் நேற்று (ஜூன்.3) தனது மகனுக்கு ஸ்கூல் பேக் வாங்க இருசக்கர வாகனத்தில் டி. கல்லுப்பட்டிக்கு சென்றிருந்தார். அவர் அங்கிருந்து கள்ளிக்குடி ரோட்டில் சென்ற போது ரோட்டின் குறுக்கே குழந்தை ஒன்று சென்றதால் நிலை தடுமாறிய சிவக்குமார் கீழே விழுந்ததில் படுகாயமடைந்து உயிரிழந்தார். இதுகுறித்து கல்லுப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story