வாணியம்பாடி அருகே செம்மரம் கடத்தியவர் ஒருவர் கைது செம்மரம் பறிமுதல் போலீசார் அதிரடி நடவடிக்கை!

X
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே செம்மரம் கடத்தியவர் ஒருவர் கைது செம்மரம் பறிமுதல் போலீசார் அதிரடி நடவடிக்கை! திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி வழியாக ஆந்திராவில் இருந்து காரில் செம்மரக்கட்டைகள் கடத்தி வருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்ரேயா குப்தாவிற்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் வாணியம்பாடி நகர காவல் துறையினர் வாணியம்பாடி நியூடவுன் பைபாஸ் சாலையில் காரை சுற்றி வளைத்து பிடித்தனர். கடத்தி வந்த ஜமுனமரத்தூர் பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் (வயது 24) என்பவர் கைது. அவரிடம் இருந்து கடத்தலுக்கு பயன்படுத்திய கார் மற்றும் 8 செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story

