திருக்கோஷ்டியூர் அருகே பள்ளி தலைமை ஆசிரியை மீது குற்றச்சாட்டு

X
சிவகங்கை மாவட்டம், திருக்கோஷ்டியூர் அருகே ஊத்துப்பட்டி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் 30-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் ராமு என்ற ஒரே ஒரு தலைமை ஆசிரியை மட்டும் பணிபுரிந்து வருகிறார். தலைமை ஆசிரியையான ராமு குழந்தைகளுக்கு முறையாக பாடம் கற்பிப்பது இல்லை என்றும் வேலை வாங்குவதாகவும் கூறி அவரை கண்டித்து பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்து வருகின்றனர். மேலும் இந்த ஆசிரியர் குறித்து பலமுறை பெற்றோர்கள் புகார் அளித்தும் மாவட்ட கல்வி அலுவலர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் என யாரும் கண்டுகொள்ளவில்லை என்றும் குற்றம் சாட்டினர்.
Next Story

